சுகப்பிர சவம்அல்ல சுதந்திரம்.
சொரிந்தநம் ரத்தம்ஒரு சமுத்திரம்.
கத்தி இல்லாமலும்
ரத்தம் சிந்தாமலும் வாங்கித்தந்த போண்டா முறுக்கு
வடையா ?-அது வர என்ன கொஞ்சநஞ்ச தடையா? (சுகப்பிரசவம்)
தியாகிகள் செந்நீரால், அபலைகள் கண்ணீரால்,
சாயமேற்றப் பட்டதுநம்
சுதந்திரக் கொடி!- அதன்
படபடப்பில் கேள்பகத்சிங்
வெடித்திடும் வெடி! காந்தியின் கைத்தடியும் காரணம் என்றாலும்,
தல்வார் பம்பாய் கப்பல்
பீரங்கி ஓசை
தகர்த்தது வெள்ளையனின்
ஆதிக்க ஆசை! அகிம்சையில் வந்ததுவாம் பாரடா! அந்தமான் சிறைக்கதவை கேளடா! (சுகப்பிரசவம்)
“சுதந்திர தீபம்இன்று கொள்ளிக்கட்டை யாகவந்து
தீய்த்திட வைத்தனரே
தேசத்தை” என்று
தேம்புகிற ஜனங்களுக்கு
சேதிஒன்றுண்டு! இப்பொழுதும் ஜொலிக்கிறதே எங்களின் சுதந்திரமே!
சுதந்திர நாளினில் கொடி
ஏற்றிடும் அன்று
தோரண ஜிகினாத்தாளில்
ஜொலிக்குதே நன்கு! லகுவா அம்பானிக்கு பணமூட்டை!-
இன்று புதுசா பெயிண்ட்அடிநம் திருவோட்டை! (சுகப்பிரசவம்)
சுதந்திர தீபத்திலே சுருட்டுகள் பற்றவைத்தே
ஷோக்கா புகைபிடிக்கும்
கஞ்சா சாமிகள்!
நேக்கா ஆகிவிட்டார்
தேசத் தியாகிகள்! சிதம்பரத் தியாகியவர் செலுத்திய கப்பலைப்பார்.
தரைதட்ட மூழ்கடித்து
மறைத்து விட்டார்கள்!
சாவர்க்கரின் தொப்பியையே
கப்பல் விட்டார்கள்!
சுதந்திரம் பாவம் சிறை புகுந்திடும். சுதந்திரத் துக்கு என்று சுதந்திரம்? (சுகப்பிரசவம்)
குறிப்பு: நாளை மறுநாள் 15.08.2023 சுதந்திர தினம்